Sunday, May 9, 2010

தலைப்பு செய்தி

தலைப்பு செய்தி

புலிக்கு இருவர் பலி

என படித்த

பின்பு தான்

தெரிந்து கொண்டேன்

கடை புளிக்கு

பலியான

என் கவிதைகளின்

வலியை .......


கடல் அலைகள்

அவள் வருகையை அறிந்து

ஆர்பரித்த

கடல் அலைகள்

அவள் பாத சுவடுகளை

கலைக்க மனம் இல்லாமல்

கரைந்து சென்றன .....

அனிச்சை செயல்

நீ எதிரே

வந்தபோது

என் குரல்

உயர்ந்து செல்வதும்

நீ என்னை கடந்து

சென்ற பின்

குறைந்து போவதும்

அனிச்சை செயல்

என

அப்போதுதான் தெரிந்து கொண்டேன்

தெரியாமலே

உனக்காக
எழுதப்பட்டன
என தெரியாமலே
அதனை
படித்தும் சென்றாய்
நான் எழுதி வைத்து சென்ற
உனக்கான
என் கவிதைகளை !!!

பைத்தியம்

குழந்தையின்

பிதற்றலை

மழலை

என்றாய்

என்னை மட்டும்

என் பைத்தியம்

என்றாய்

பெண்ணே ?

பனிப்போர்

உன் இதழுக்கும்

உன் இமைக்கும்

ஏன் இந்த பனிப்போர் ?

இமைகளால் என்னை

அழைத்துவிட்டு

இதழ்களால்

என்னை

மறுக்கிறாய்

நீதான்

காற்றின்

ஈரப்பதம்

கதிரவனால்

குறைந்தாலும்

என்

கற்பனைகளுக்கான

நீருற்று

நீதான்