Sunday, May 9, 2010

தேடி பிடித்தல் விளையாட்டு

தேடி

பிடித்தல்

விளையாட்டு

பிடிக்கும் என்றாய்

ஆட்டம்

தொடங்கியது

விளையாட்டாய்

நான்

தேடுவதாய்

நடித்து கொண்டிருந்தேன்

நீயோ

உண்மையிலே

மறைந்து

நின்றாய்

பதைத்து

நின்றேன்

சில

நிமிடங்கள்

அதையும்

ரசித்து

நின்றாய்

மறைந்து

கொண்டு

விளையாட்டே

வினையாகி போனது

எனக்கு

நீயும்

விட்டு கொடுப்பதாய்

இல்லை

நான் சோர்ந்த போதும்

உன்

அருகில்

இருந்தும்

என்னை

அலைய வைத்தாய்

சில நேரம்

அழுதும் நின்றேன்

மனதுக்குள்ளே

என்

அலறல்கள் அறிந்து

வெளியே வந்தாய்

போதும் இந்த

கண்ணாமூச்சி

ஆட்டங்கள்

என

கடிந்து கொண்டதும்

சுருங்கி போனாய்

உன்

மௌனம்

எனும்

அஹிம்சையால்

எனை

தண்டித்தாய்

இறுதியில்

உன் அஹிம்சா போராட்டத்தில்

வெற்றியும் கண்டாய்

இனி

போராட்டம் உனக்கல்ல

எனக்குத்தான்

மீண்டும்

நீ

மறைதலில்

மீண்டும்

நான் உன்

தேடலில்

No comments: