நீ
பிரிந்து
செல்லும் கணம்
ஏன் பார்வை
பறி போனதாய்
உணர்ந்து நின்றேன்
நீ
எதையும்
கொடுத்து செல்லவில்லை
எடுத்து மட்டும் சென்றாய்
என் இதயத்தை
தேடி தேடி
உன் பிரிவை
தெரிவித்தாய்
உன்
உற்றோருக்கு
உன் அருகிலேயே
இருந்த
என்னை மட்டும் ஏன்?
தொலைத்து நின்றாய்
விழி ததும்ப
கண்ணீருடன்
காத்து நின்றனர்
உன் பிரிவுக்கு
நானும் நின்றேன்
அழுது கொண்டே
சத்தமில்லாமல்
இது தான் கடைசி
தருணம்
என தெரிந்து இருந்தும்
சொல்ல முடியாமல்
தவித்து இருந்தேன்
வந்தும் சேர்ந்தது
உன் பிரிவின்
கடைசி நொடி
காய்ந்து விடும்
கண்ணீரால்
விடை கொடுத்தனர்
உன் தோழியர்
ஆறாக்காயத்துடன்
வெடித்து சிவந்து நின்றேன்
நான்
உனக்காக
என் சி(ற) வந்தவளே.

No comments:
Post a Comment