Sunday, May 9, 2010

முன்னுறு நாட்கள்

முன்னுறு நாட்கள்

எனக்காகவும்

சுவாசித்தாய்

எனக்காகவும்

உணவுண்டாய்

உனக்கென

ஏதும் செய்யாமல்

எனக்காக

புது வாழ்வு வாழ்ந்தாய்

கர்ப்பக் கிரகத்து

கடைசி

நிமிடங்கள்

எனக்கு

இது போல்

மீண்டும் ஓர்

இடம் இல்லை

என அழுது பிறந்தேன்

நீயோ

இறந்து

பிறந்தாய்

மீண்டும்

புதியவளாய்

நான்

வளர்கையில்

நீ

குழந்தை

ஆனாய்

அதிகாலையே

நான்

விழித்துகொண்டாலும்

உன் அர்ச்சனைகள்

கேட்காமல் எனக்கு

விடிந்தது இல்லை

உன் கைபட்ட

பின் தான்

அன்னம் அமிர்தம்

ஆகிறது

என

பொய் சொல்லி

உன்னை

பூரிப்பில் ஆழ்த்துவேன்

நீயோ

அலட்டிகொள்ளதவளாய்

சிறு புன்னகையை

விட்டு சென்றிடுவாய்

முதல் முறையாய்

நெடும்பயணம்

என

தயார் ஆன போது

காற்றில் இருந்த ஈரப்பதம்

எல்லாம் உறிஞ்சி

உன்

கண்ணீராய் கொண்டாய்

நெடும் பயணத்து

விக்கல்களில்

உன்னை எனக்கு

நினைவுட்டினாய்

ஆறு

அடி

தூரத்திலேயே

எனது

பல நாள் பசியை

உன் கண்களால்

அளந்து விட்டாய்

அருகில்

வந்ததும்

எதிர்பாராத

செல்ல அறைகளால்

என்னை அரவணைத்தாய்

மீண்டும் ஓர்

பயணத்துக்கு

வேண்டி நின்றேன்

இறைவன் இடத்தே

அன்றைய

இரவே

பஞ்சு மெத்தையாய்

உன் மடியினிலே

ஐந்தே நிமிடங்களில்

உறக்கத்தில் கலந்தேன்

உன் செல்ல கோதலில்

என் கேசத்துடன்

விடியும் வரை

விழித்து இருந்தாய்

நான்

உன் மடியில்

உறங்குகிறேன் என

எனக்காக எல்லாம்

செய்தாய்

என்னிடம் எதையும்

எதிர் பாராமல்

உனக்காக என்னிடத்து

இந்த

பிரார்த்தனைகள் மட்டுமே தரமுடியும்

இறைவனிடத்தே

என்றும் இவளை

நீக்கி

விடாதே என்னிடத்து

என் அன்பு தாய் அவளை

No comments: