முன்னுறு நாட்கள்
எனக்காகவும்
சுவாசித்தாய்
எனக்காகவும்
உணவுண்டாய்
உனக்கென
ஏதும் செய்யாமல்
எனக்காக
புது வாழ்வு வாழ்ந்தாய்
கர்ப்பக் கிரகத்து
கடைசி
நிமிடங்கள்
எனக்கு
இது போல்
மீண்டும் ஓர்
இடம் இல்லை
என அழுது பிறந்தேன்
நீயோ
இறந்து
பிறந்தாய்
மீண்டும்
புதியவளாய்
நான்
வளர்கையில்
நீ
குழந்தை
ஆனாய்
அதிகாலையே
நான்
விழித்துகொண்டாலும்
உன் அர்ச்சனைகள்
கேட்காமல் எனக்கு
விடிந்தது இல்லை
உன் கைபட்ட
பின் தான்
அன்னம் அமிர்தம்
ஆகிறது
என
பொய் சொல்லி
உன்னை
பூரிப்பில் ஆழ்த்துவேன்
நீயோ
அலட்டிகொள்ளதவளாய்
சிறு புன்னகையை
விட்டு சென்றிடுவாய்
முதல் முறையாய்
நெடும்பயணம்
என
தயார் ஆன போது
காற்றில் இருந்த ஈரப்பதம்
எல்லாம் உறிஞ்சி
உன்
கண்ணீராய் கொண்டாய்
நெடும் பயணத்து
விக்கல்களில்
உன்னை எனக்கு
நினைவுட்டினாய்
ஆறு
அடி
தூரத்திலேயே
எனது
பல நாள் பசியை
உன் கண்களால்
அளந்து விட்டாய்
அருகில்
வந்ததும்
எதிர்பாராத
செல்ல அறைகளால்
என்னை அரவணைத்தாய்
மீண்டும் ஓர்
பயணத்துக்கு
வேண்டி நின்றேன்
இறைவன் இடத்தே
அன்றைய
இரவே
பஞ்சு மெத்தையாய்
உன் மடியினிலே
ஐந்தே நிமிடங்களில்
உறக்கத்தில் கலந்தேன்
உன் செல்ல கோதலில்
என் கேசத்துடன்
விடியும் வரை
விழித்து இருந்தாய்
நான்
உன் மடியில்
உறங்குகிறேன் என
எனக்காக எல்லாம்
செய்தாய்
என்னிடம் எதையும்
எதிர் பாராமல்
உனக்காக என்னிடத்து
இந்த
பிரார்த்தனைகள் மட்டுமே தரமுடியும்
இறைவனிடத்தே
என்றும் இவளை
நீக்கி
விடாதே என்னிடத்து
என் அன்பு தாய் அவளை

No comments:
Post a Comment